» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கி மேலாளரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி: நெல்லை வாலிபர் கைது!
திங்கள் 6, அக்டோபர் 2025 10:11:45 AM (IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி வங்கி மேலாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, கனையார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (36). இவர் அரியலூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ராஜசேகர் தனக்கு கூகுளில் வந்த லிங்கை தொட்டு ஒரு டிரேடிங் குழுவில் இணைந்துள்ளார்.
இக்குழுவிலுள்ள அட்மின்கள் 500 சதவீதம் லாபம் பெறலாம் எனக் கூறி அறிவுரைகள் வழங்கியதையடுத்து, அவர்கள் கூறியபடி தனது செல்போனில் தனியார் செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்துள்ளார். முதலில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை தனது வங்கி கணக்கின் மூலமாக எடுத்துள்ளார்.
மேலும் அதிக லாபம் பெறலாம் என பல்வேறு தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.46 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதனால் அந்த செயலியின் வாலட்டில் ரூ.25 கோடி சேர்ந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது 2 சதவீதம் சேவை கட்டணமாக ரூ.50 லட்சத்தை கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர் இது தொடர்பாக 1930 என்ற இணைய குற்ற உதவி எண் மூலமாக அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணின் உரிமையாளர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் வேலு (31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முத்தமிழ்செல்வன் வழிகாட்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் இசைவாணி தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த வேலுவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக வேலுவிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 செல்போன்கள், 6 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். அட்டைகள், வங்கி கணக்கு புத்தகம், ஆபீஸ் சீல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கப் பணி: பயணிகள் மகிழ்ச்சி!
வியாழன் 9, அக்டோபர் 2025 12:45:42 PM (IST)

கல்லூரி மாணவிகளுக்கான மாநில ஹாக்கி போட்டி: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 8, அக்டோபர் 2025 3:40:06 PM (IST)

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:39:02 PM (IST)

நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)

சேரன்மகாதேவி வட்டத்தில் பலத்த காற்றில் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: ஆட்சியர் ஆய்வு
சனி 4, அக்டோபர் 2025 4:50:47 PM (IST)
