» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
திருநெல்வேலியில் விற்பனைக்காக 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கே.புரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டானா பகுதியைச் சேர்ந்த அன்வர்அலி (45), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த அசன்மைதீன் (56) ஆகிய 2 பேரையும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் 2 பேரையும் வி.கே.புரம் காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அன்வர்அலி, அசன்மைதீன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது
வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)




