» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் வினோத்குமார் (30). கூலி தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மதுசுதன் (5), மகேஷ் (2 மாதம்) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வினோத்குமார் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினோத்குமாரை தென்காசி அனைத்து மகளிர் போலீசார் மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக வினோத்குமாரை போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த தந்தை மாடசாமியிடம் வினோத்குமார் பேசினார். அப்போது அவர், ‘‘தொலைபேசியில் பேசுவதற்கு பணம் இல்லை, ஆயிரம் ரூபாயை அனுப்பி வையுங்கள்’’ என கூறியுள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வினோத்குமாரை மீண்டும் சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் வினோத்குமார் நேற்று திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினோத்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டு ஏன்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

