» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, துவக்கி வைத்தார்.
பாரம்பரிய பனைமரம் வளர்ப்பதன் மூலம் கண்மாய், ஏரி, ஊரணி கரை மற்றும் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் போது நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இலட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் ஸ்கூல், அரசு மேல்நிலை பள்ளி கங்கைகொண்டான், சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் என அனைவரும் இணைந்து பனை விதைகளை நட்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட வனச்சரக அலுவலர் ஜெய பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் பெளிக்ஸ் பிரான்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

