» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, துவக்கி வைத்தார்.
பாரம்பரிய பனைமரம் வளர்ப்பதன் மூலம் கண்மாய், ஏரி, ஊரணி கரை மற்றும் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் போது நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இலட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் ஸ்கூல், அரசு மேல்நிலை பள்ளி கங்கைகொண்டான், சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் என அனைவரும் இணைந்து பனை விதைகளை நட்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட வனச்சரக அலுவலர் ஜெய பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் பெளிக்ஸ் பிரான்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

