» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)
போக்சோ கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் டி.ஐ.ஜி. முருகேசன் விசாரணை நடத்தினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் வினோத்குமார் (30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் அவரை பிடித்து சமீபத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் வினோத்குமார் தனது துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறைக்கு வந்தார். அவர் சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. வினோத்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

