» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)
நெல்லையில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. வருகிற 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகன் கோவில்களில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலைகுமார சுவாமி கோவிலில் காலையில் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும். நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வருகிற 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரமும், 28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று குறிச்சி சொக்கநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம், 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இதேபோல நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், குட்டத்துறை முருகன் கோவில், வாசுகிரி மலை முருகன் கோவில், பொன்மலை முருகன் கோவில், நெல்லை டவுன் வேணுவன குமாரர் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)


