» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு

ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மெஞ்ஞானபுரத்துக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ராபர்ட் வீரகேரளம்புதூருக்கும், கடையநல்லூர் ஆடிவேல் ஆலங்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர குமரி மாவட்டத்தில் பணிபுரியும் அந்தோணியம்மாள், ஜெயலட்சுமி, உமா ஆகிய 3 பெண் இன்ஸ்பெக்டர்களும் அந்த மாவட்டத்துக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேசமணி நகர் ஜெசி மேனகா, சுசீந்திரம் பெனடிக்ட், புதுக்கடை மகேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory