» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)
தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டியில் இருந்து, தென்காசியின் திருமலை கோயில் நோக்கி தனியார் பேருந்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலை புறப்பட்டது. இதே போல தென்காசியில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் எனும் கிராமத்தில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கன.
இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வேக கட்டுப்பாட்டை பின்பற்றாமல், அதிவேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளது. அதேபோல விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். உயிரிழந்த 8 பேரில், மாற்றுத்திறனாளி இளம் பெண்ணின் தாயும் ஒருவர்.
இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயினுடைய பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். தற்போது தாய் உயிரிழந்த நிலையில் அவருடைய எதிர்காலம் கேள்விக்குள்ளானது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் விரைவில் வழங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

