» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

திருநெல்வேலியில் கனமழையின் காரணமாக சேதமடைந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி டவுணில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப மேல்பகுதியிலுள்ள சுற்றுச்சுவர் பகுதியளவு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்த சுற்றுச்சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஏராளம். அப்படிப் போராடிய தியாகச் செம்மல்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக உ.சிதம்பரனார் மணிமண்டப மேல்பகுதியிலுள்ள சுற்றுச்சுவர் பகுதியளவு சேதமடைந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, போர்க்கால அடிப்படையாக அந்த சுற்றுச்சுவர் பகுதியினை பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு மழைக்காலம் முடிவடைந்தவுடன் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)


P. SENTHIL SARAVANA DURAINov 27, 2025 - 09:48:03 AM | Posted IP 162.1*****