» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)
கூடங்குளம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி மூக்கம்மாள் (70). இந்த தம்பதிக்கு 3 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்துப்பாண்டியும், மூக்கம்மாளும் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் காற்றுக்காக கதவை பூட்டாமல் லேசாக அடைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மூக்கம்மாளின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூக்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மூக்கம்மாள் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெஜில்சன் மற்றும் கிருபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி ஒப்புதல் சீட்டு பெற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 26, நவம்பர் 2025 4:33:50 PM (IST)




