» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)
கூடங்குளம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி மூக்கம்மாள் (70). இந்த தம்பதிக்கு 3 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்துப்பாண்டியும், மூக்கம்மாளும் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் காற்றுக்காக கதவை பூட்டாமல் லேசாக அடைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மூக்கம்மாளின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூக்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மூக்கம்மாள் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெஜில்சன் மற்றும் கிருபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

