» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் பணிபுரியும் முதல் பெண் கண்டக்டர் பகவதி ‘சிறப்பாக பணியாற்றுவேன்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
‘ஆணுக்குப் பெண் நிகர்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், விண்வெளி என்று எட்டுத்திக்கும் புகழ் சேர்க்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் பெண் கண்டக்டராக பகவதி (38) என்பவர் சமீபத்தில் பணியில் சேர்ந்து திறம்பட பணியாற்றி வருகிறார். இவர், நெல்லை டவுனில் இருந்து ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். பஸ்சில் சுறுசுறுப்பாக பணியாற்றியும், பயணிகளிடம் கனிவாக பேசியும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இதுகுறித்து பெண் கண்டக்டர் பகவதி கூறியதாவது: எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே துரைச்சாமியாபுரம் ஆகும். என்னுடைய கணவர் வைரமுத்து, லாரி டிரைவராக உள்ளார். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். 2-வது மகள் பொள்ளாச்சி மாவட்டம் கோத்தனூரில் நர்சிங் படித்து வருகிறார்.
நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். சிறு வயதிலே எனது தந்தை இறந்ததால், உயர்கல்வி படிக்கவில்லை. நான் 8-ம் வகுப்பு படித்தபோது காரை இயக்க முற்பட்டதில் பின்பக்கமாக நகர்ந்ததால் விபத்தில் சிக்கியது. எனவே எப்படியேனும் வாகனங்களை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வாகனங்களை படிப்படியாக இயக்க கற்றுக்கொண்டேன். கடும் சிரமத்துக்கு இடையிலும் நன்றாக பயிற்சி பெற்று, தற்போது கனரக வாகனங்களை ஓட்டவும், கண்டக்டர் பணிக்கும் சேர்த்து உரிமம் பெற்றுள்ளேன். பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், அதனை நேசித்து பணியாற்றினால் சாதனை படைக்கலாம்.
எனக்கு கனரக வாகனங்களை நன்றாக இயக்க தெரியும். கண்டக்டர் ேவலையையும் நேசித்து செய்கிறேன். இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. என்னை அரசு பணி நிரந்தரம் செய்தால், என்னைப் போன்று பல பெண்களும் ஆர்வமுடன் இந்த பணிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

