» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணப்பாட்டில் யூபிலி 2025ஆம் ஆண்டு நிறைவு மதுவிலக்கு பேரணி

சனி 27, டிசம்பர் 2025 5:50:27 PM (IST)



மணப்பாட்டில் யூபிலி 2025ஆம் ஆண்டு நிறைவு மதுவிலக்கு பேரணி நடைபெற்றது.

கத்தோலிக்க திருவையானது உலகம் முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி வரை இயேசு பிறந்த 2025 யூபிலி ஆண்டாக அறிவித்துக் கொண்டாடுகிறது. இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.

அதன் முத்தாய்ப்பாக, தூத்துக்குடி மறைமாவட்டம் பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு மற்றும் மணப்பாடு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையோடு இணைந்து, பங்குத் தந்தையர்கள் ஒருங்கினைப்பில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சரியாக மாலை 4 மணி அளவில் மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணியானது மணப்பாடு தூய யாகப்பர் ஆலயம் தொடங்கி தூயஆவியார் ஆலயம் வழியாக கடற்கரை சென்றடைந்து அங்கிருந்து புனித திருச்சிலுவை உயர் திருத்தலத்திலத்திற்கு பவனியாக சென்று திருப்பலி நடைபெற்றது. 

திருப்பலியில் பல்வேறு குடிநோய் மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நலமடைந்த குடும்பங்களுக்கு நன்றி செலுத்தவும், மேலும் குடி நோயால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்காக ஜெபிக்கவும், சிறப்பாக வளர்வாழ் மாணவர்கள், இளைஞர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவும் சிறப்பு நன்றி மற்றும் வேண்டுதல் செய்யப்பட்டது. 

இந்த திருப்பலியை அருள்பணி ஜெயந்தன் டி கிரேஸ், இயக்குநர், பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு, மணப்பாடு உயர்திருத்தல அதிபர் அருள்பணி மைக்கேல் க்ராசியுஸ், மணப்பாடு தூய ஆவியார் பங்குத்தந்தை அருள்பணி ஜெய்கர், புனித பிரான்சிஸ் சவேரியார் மரைன் நிறுவனஇனை இயக்குநர் அருள்பணி மனோ மற்றும் மணப்பாடு திருத்தொண்டர் தலைமையேற்று நடத்தி சிறப்பித்தார்கள். 

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை தலைவர் ரூஸ்வெல்ட், அருள்சகோதரர் ரஷ்யன், மணப்பாடு ஆசியர்கள் வலன்டின் இளங்கோ, சிலுவை கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்கள் என்பதால் மணப்பாடு மக்களோடு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு யூபிலி ஆசீர் பெற்று சென்றார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory