» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் (Powerloom Modernisation Scheme) மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது. 1. சாதாரண விசைத்தறிகளை ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% (அதிகபட்சம் ரூ.1 லட்சம்),
2. புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்ய 20% (அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்),
3. பொது வசதி மையம் அமைக்க 25% (அதிகபட்சம் ரூ.5 லட்சம்) மானியம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் திருநெல்வேலி சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 627009 என்ற முகரியினை அணுகி தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

