» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் மீன் வியாபாரியை தாக்கி, கடை சூறை : பெண்கள் உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு!

புதன் 31, டிசம்பர் 2025 10:29:33 AM (IST)



தூத்துக்குடியில் பெண் மீன் வியாபாரியை தாக்கி, அவரது கடையை சேதப்படுத்திய பெண்கள் உட்பட 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி பார்வதி (63). இவர் தூத்துக்குடி பெருமாள் புரம் மெயின் ரோட்டில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அகற்ற வலியுறுத்தி அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பெண்கள் இவரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த பகுதியை அந்த பெண்களின் உறவினர்கள் சிலர் சேர்ந்து மீன் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். 

மேலும் மீன் கடை நடத்தி வரும் பார்வதியையும் கொடூரமாக தாக்கினார்களாம். இதில், படுகாயம் அடைந்த பார்வதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

PRABHAKARANDec 31, 2025 - 03:22:57 PM | Posted IP 162.1*****

50 ரூபாய்க்கு மீன் வாங்கிட்டு, 150 ரூபாய் மீனை ஓசியில் கேட்டிருக்கிறாளுக.... மீன்கார பார்வதி அக்கா தரமுடியாது என்றதால் கடையை அப்புறப்படுத்த சொல்லி தகராறு செய்து கடையை அடித்து நொறுக்கினாங்க என மீன் விற்கும் பார்வதி அக்கா சொல்கிறார்கள்....

தமிழ்ச்செல்வன்Dec 31, 2025 - 03:01:38 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் பொம்பளைகள் எல்லாம் ரவுடித்தனத்துல இறங்கிட்டாளுகளா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory