» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)
அரசுப் பேருந்துகள் சுங்கசாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக்கில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி சுங்கசாவடிக்கு வந்த போது, பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கசாடியினை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டதாக செய்திதாள்களில் வெளியானது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- திருநெல்வேலி மண்டலத்தில் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் டோல்கேட்டுகளை கடந்து செல்வதற்கு தேவையான முன்பணங்கள் ஏற்கனவே பாஸ்டேக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் பாஸ்டேக்கில் ஏற்படும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே சுங்கசாவடிகளில் அரசுப் பேருந்துகள் காலதாமதமாக கடந்து செல்கிறது. மேலும் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கால தாமதம் ஏற்படாமல், குறித்த நேரத்தில் சுங்க சாவடிகளை கடப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)

சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!
சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)

