» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!

வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)



மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசுப் பேருந்துகள் கேரளாவுக்குள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் அனைத்து தமிழகப் பேருந்துகளும் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரள அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகப் பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே செல்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக மருத்துவத் தேவைகளுக்காக திருவனந்தபுரம் செல்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் எல்லையிலேயே இறக்கிவிடப்பட்டனர். 

களியக்காவிளையில் இருந்து கேரளா பகுதிக்குள் செல்ல ஆட்டோ அல்லது வாடகை வாகனங்கள் கிடைக்காததால், பல கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் மீண்டும் முழுமையாகப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory