» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம்!

புதன் 18, பிப்ரவரி 2026 8:17:48 AM (IST)

தூத்துக்குடியில் சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியை ஒட்டிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் செல்வதற்காகக் கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்தில் இருப்பதால், சாலையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வருவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக மணல்களைச் சேர்த்துச் சாய்வு தளங்கள் மற்றும் படிக்கட்டுகளை அமைத்திருந்தனர். இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், வீடுகளுக்குச் செல்ல மாற்று வழிகளை ஏற்படுத்தித் தரும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என மக்கள் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.


மக்கள் கருத்து

babuFeb 18, 2026 - 01:21:51 PM | Posted IP 104.2*****

salaiyora kadaikallam pokkuvarathukku idainchala illaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory