» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம்!
புதன் 18, பிப்ரவரி 2026 8:17:48 AM (IST)
தூத்துக்குடியில் சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியை ஒட்டிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் செல்வதற்காகக் கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்தில் இருப்பதால், சாலையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வருவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக மணல்களைச் சேர்த்துச் சாய்வு தளங்கள் மற்றும் படிக்கட்டுகளை அமைத்திருந்தனர். இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், வீடுகளுக்குச் செல்ல மாற்று வழிகளை ஏற்படுத்தித் தரும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என மக்கள் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)


babuFeb 18, 2026 - 01:21:51 PM | Posted IP 104.2*****