» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)
நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.
ஜோபின் சாலமோன் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கல்வி தொடர்பான வாட்ஸ்-அப் குழுவில் உள்ள மாணவிகளின் எண்களைத் தனியாக எடுத்து, இரவு நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்துப் பள்ளி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவர் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

