» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: வேலை கிடைக்காத விரக்தியில் சோகம்!
சனி 14, மார்ச் 2026 11:18:11 AM (IST)
தூத்துக்குடியில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத மனவேதனையில், கணினி அறிவியல் பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகள் ஸ்ரேயா (31). இவர் கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த ஸ்ரேயாவிற்கு நீண்ட நாட்களாகச் சரியான வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தகுந்த வேலை கிடைக்காததாலும், திருமணக் கவலையாலும் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)


பழைய மாணவன்Mar 14, 2026 - 12:22:09 PM | Posted IP 172.7*****