» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)



தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை நிறுத்திச் சோதனையிட்டனர். 

அவரது வாகனத்தில் ரூ.1,54,300 இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்தத் தொகையை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தப் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

கீதாMar 17, 2026 - 07:57:06 PM | Posted IP 162.1*****

நடராஜன் என்ன பாகிஸ்தான் தீவிரவாதியா டா கட்சிகள் சார்பில் பணம் பட்டுவாடா தொடங்கி பல நாளாச்சு மூளை இருக்கும் மூதேவி போலீஸ் முடிஞ்சா அவங்கள பிடிங்கடா சாதாரண மக்கள் வயற்றில் அடிக்கும் காக்கி களவாணிகளா நீங்க திருந்தவே மாட்டிங்களா டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory