» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!

திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)



ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது குறித்து அதிமுக வேட்பாளர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை முன்னிட்டு, அதிமுக ஒன்றிய மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுடன் அவர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த ரகசியக் கூட்டத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பிரபாகரன் பேசியதாவது:  "வாக்காளர் ஒருவருக்குத் தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும். திமுகவினருக்குத் தவிர்த்து, காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைவருக்கும் பணம் வழங்கப்பட வேண்டும். யார் கேட்டாலும் 'இல்லை' என்று சொல்லாமல் கொடுங்கள்; அதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ராதாபுரம் தொகுதியில் கடந்த காலங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்டதை நினைவில் கொண்டு, எந்தவொரு வாக்கையும் தவறவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டும்." என்று பேசினார்

தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக வேட்பாளரே வெளிப்படையாகப் பணம் வழங்க அறிவுறுத்தும் வகையிலான இந்த வீடியோ வெளியாகி இருப்பது தென்காசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory