» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ்: தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு வழங்கப்பட்ட ஆதரவு தற்போது முறைப்படி திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதை விட, மக்கள் நலனை முன்னிறுத்தி வாக்களிப்பதே சிறந்தது என்ற நிலையை ஆயர் பேரவை எடுத்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்: பொதுமக்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள், தத்தமது தொகுதிகளில் மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொள்ளும் வேட்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது வேட்பாளரின் தனிப்பட்ட தகுதி மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)


அரசியல் பார்வையாளர்Apr 22, 2026 - 12:08:47 PM | Posted IP 172.7*****