» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியில் தெருவிளக்குகள் எரியாமல் அவலம்: திருட்டு, வழிப்பறி பயத்தில் பொதுமக்கள்!
செவ்வாய் 26, மே 2026 7:56:37 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதால் சங்கிலிப் பறிப்பு, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அரங்கேறும் சூழல் நிலவி வருவதாகப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாகத் தெருவிளக்குகள் எரியாமல் முற்றிலும் முடங்கியுள்ளன. மாலை 6 மணி முதலே ஒட்டுமொத்தத் தெருக்களும் கும்மிருட்டில் மூழ்கிவிடுவதால், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே சாலைகளில் நடமாடக் கூட முடியாத பாதுகாப்பு அற்ற நிலை நீடித்து வருகிறது.
தெருக்களில் விளக்குகள் எரியாமல் இருட்டாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மர்ம நபர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் இருண்ட தெருக்கள் வழியாகச் சென்று வர நேரிடும் போது, ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது தெருநாய்களின் கடி உள்ளிட்ட விபத்துகளோ ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்துள்ள பழைய எல்இடி தெருவிளக்குகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக அகற்றிவிட்டுப் புதிய விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)



அதுமே 27, 2026 - 04:32:56 PM | Posted IP 104.2*****