» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அரசு வழக்கறிஞருக்கு எஸ்.பி., பாராட்டு!

புதன் 27, மே 2026 11:00:03 AM (IST)



வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் கிஸ்ஸிங்கருக்கு எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸ்ஸிங்கரை நியமித்து உத்தரவிட்டார். 

சமீபத்தில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடியதை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 


மக்கள் கருத்து

ஒருவன்மே 27, 2026 - 04:40:20 PM | Posted IP 104.2*****

வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory