» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அரசு வழக்கறிஞருக்கு எஸ்.பி., பாராட்டு!
புதன் 27, மே 2026 11:00:03 AM (IST)

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் கிஸ்ஸிங்கருக்கு எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸ்ஸிங்கரை நியமித்து உத்தரவிட்டார்.
சமீபத்தில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடியதை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)



ஒருவன்மே 27, 2026 - 04:40:20 PM | Posted IP 104.2*****