» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!

புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

கொட்டாரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

மாணவி சிவசந்தியா இன்று காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சிவசந்தியா மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அந்தப் பகுதிப் பொதுமக்கள், உடனடியாகப் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory