» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)
கொட்டாரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
மாணவி சிவசந்தியா இன்று காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சிவசந்தியா மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அந்தப் பகுதிப் பொதுமக்கள், உடனடியாகப் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)


