» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

செவ்வாய் 14, ஜூலை 2026 8:37:01 AM (IST)

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ் நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (40). இவர் மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று (ஜூலை 13) இரவு 9.30 மணி அளவில் மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் இருவருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். 

சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து மூவரையும் அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை இருவரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 14 காலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக் கொலை சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இரு வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறார்.


மக்கள் கருத்து

BabuDec 26, 1784 - 12:30:00 PM | Posted IP 162.1*****

policemela payam illai police adicha udane nivaranam ketu varuvanuga policea arreset panuranga avanga yenaku yenna nu vitta nalaiku namakum vettu vilum pola intha naikala 2 kai kkalayum odaikanum 80 90s la irunthaa police kita training yedunga pa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory