» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை : அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
புதன் 15, ஜூலை 2026 10:31:38 AM (IST)

தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை என்றும், எம்.எல்.ஏ-க்களின் அதிருப்தியால் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுகிறது.
குறிப்பாக, மேகதாது பிரச்சனையால் டெல்டா பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரை அணுகித் தண்ணீர் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் அரசு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ளாமல், மக்களை ஏமாற்றுவதற்கான வழிகளை மட்டுமே அரசு தேடுவதால், இந்த முதல்வர் தேவையா என டெல்டா மக்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லை. எம்.எல்.ஏ-க்கள் வேறு எங்குமாவது சென்று விடுவார்கள் என்ற பயம் அரசிடம் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்கள் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுவார்கள் என்றும், அதன் மூலம் இந்த ஆட்சி கவிழும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
கந்தசாமிJul 15, 2026 - 12:36:32 PM | Posted IP 172.7*****
பாவம் பைத்தியம் முத்தி விட்டது பன்றிக்கு விலங்கு போடவேண்டியதுதான்
மேலும் தொடரும் செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)



படித்தவன்Dec 26, 1784 - 06:30:00 AM | Posted IP 172.7*****