» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்துப் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:43:27 AM (IST)

தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்குக் குடிநீர் சப்ளை செய்யும் பிரதான குழாய் கடந்த வாரம் உடைந்ததால் நகரில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. மேலும், தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் தூத்துக்குடிக்கு வரும் நீரின் அளவும் குறைந்து, சீரான குடிநீர் விநியோகம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த 10 நாட்களாகக் குடிநீர் வராததால் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்துத் தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இன்று காலை தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் காலியான பானைகளை நடுரோட்டில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் பாத்திமா நகர் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
BalaAug 10, 2026 - 01:08:03 PM | Posted IP 104.2*****
விசிலடிங்க தாகம் தீரும்..
முட்டாள்Aug 10, 2026 - 12:27:29 PM | Posted IP 162.1*****
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் மேயர் கொண்டு வருவாரு , அது உண்மையா ??
மேலும் தொடரும் செய்திகள்

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)



KavyaAug 10, 2026 - 08:48:37 PM | Posted IP 172.7*****