» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)
பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' பணியிடத்திற்கு ஆக.27க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் கீழ் (TNHSRP) 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' (Trauma Registry Staff Nurse) தற்காலிக ஒப்பந்தப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.kanyakumari.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27-ஆம் தேதி (27.08.2026) மாலை 5.00 மணிக்குள்ளாக மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)


