» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' பணியிடத்திற்கு ஆக.27க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் கீழ் (TNHSRP) 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' (Trauma Registry Staff Nurse) தற்காலிக ஒப்பந்தப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.kanyakumari.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27-ஆம் தேதி (27.08.2026) மாலை 5.00 மணிக்குள்ளாக மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory