» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

RangerArrest.jpg

யானை தடுப்பு அகழிப் பணி செய்த ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற சிவகிரி வனச்சரகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள், அடிக்கடி காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, வனத்தையொட்டியுள்ள பகுதிகளில், யானை தடுப்பு அகழி பணி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் சிவகிரி வனச்சரகர் கதிரவன் (51), கமிஷன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் பொறிவைத்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார், வனச்சரகர் கதிரவன் ரூ. 1 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory