» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

யானை தடுப்பு அகழிப் பணி செய்த ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற சிவகிரி வனச்சரகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள், அடிக்கடி காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, வனத்தையொட்டியுள்ள பகுதிகளில், யானை தடுப்பு அகழி பணி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் சிவகிரி வனச்சரகர் கதிரவன் (51), கமிஷன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் பொறிவைத்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார், வனச்சரகர் கதிரவன் ரூ. 1 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:15:13 PM (IST)

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:33:58 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)


