» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)
தென்காசியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்காசியில் இருந்து நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. சம்பவம்: பேருந்தில் களக்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஸ்டின் (41) என்பவர் பணகுடிக்கு பயணச்சீட்டு எடுத்து பயணித்தார். அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
பயணம் செய்தபோது ஜெபஸ்டின் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு கூச்சலிட்டார். மாணவியின் கூச்சலைக் கேட்டுப் பேருந்திலிருந்த சக மாணவிகளும் மற்ற பயணிகளும் ஜெபஸ்டினைக் கண்டித்துத் தட்டிக்கேட்டனர்.
இருப்பினும் அவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தைப் பணகுடி காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். பேருந்தில் இருந்த பயணிகள் ஜெபஸ்டினைப் பணகுடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி, ஜெபஸ்டினை அதிரடியாகக் கைது செய்தார். விசாரணையில் அவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அவரிடமிருந்த அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)


