» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையினரின் பணியைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று அவர்களை நேரில் அழைத்துச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
காவல் உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள்: மு. கார்த்திக், ஜே. ஜோசப், காவலர்கள் அ. விசு, ப. தினேஷ்குமார், போக்குவரத்துப் பிரிவு: தலைமைக் காவலர் ஆகியோரை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து இவர்களது சிறப்பான பணியைப் பாராட்டிய டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு, அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)



Selvakumari MAug 24, 2026 - 05:51:57 PM | Posted IP 172.7*****