» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

தூத்துக்குடியில், பருவகால மாறுபாடுகளால் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க, மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைநீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, நிலத்தடி நீரின் உவர்ப்புத் தன்மையும் குறைந்து பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாறுகிறது. வறட்சி காலங்களில் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்குப் பயன்படக்கூடிய நீர்நிலைகள் ஏதும் இல்லாத சூழலில், ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீரைச் சேகரித்து வைக்கும் அமைப்பை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்தி, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவை (Town Planning Section) நேரில் அணுகி விவரங்களைப் பெற்றுச் செயல்படுத்தலாம் என ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory