» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை - குமரி இடையே தேர்தல் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல்!!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:06:25 PM (IST)
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தை பொருத்தவரை 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவை தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இதனிடையே, வாக்குப்பதிவை ஒட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து வசதிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. தற்போது வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, 18 மற்றும் 20ம் தேதிகளில் சென்னை தாம்பரம் - கன்னியாகுமரிக்கும், சென்னையின் எழும்பூர் - கோவைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களிலும் தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது.

அதேபோல், சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில் 18 மற்றும் 20ம் தேதி ஆகிய இரு தினங்களில் மாலை 4.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் செல்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதியில் அரசு கலை கல்லூரி : தமிழக முதல்வருக்கு மாணவர் சங்கம் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 5:28:30 PM (IST)

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:38:41 PM (IST)

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)




