» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 4:56:05 PM (IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.கே. பிரபாகரை, டிஎன்பிஎஸ்சியின் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-யின் தலைவராக எஸ்.கே. பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரச பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை அனுப்பியது.
ஆனாலும், அந்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-க்கு, புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் காயம்: சாலையில் சிதறிய வாழைக்காய்கள்..!
திங்கள் 12, ஜனவரி 2026 7:57:56 AM (IST)

இலங்கை தமிழர்கள் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 7:42:35 PM (IST)

கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST)

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் : அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:41:15 AM (IST)

ஜெ., மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண் விரட்டியடிப்பு!
சனி 10, ஜனவரி 2026 5:41:14 PM (IST)

விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: டிரைவரிடம் விசாரணை
சனி 10, ஜனவரி 2026 5:04:46 PM (IST)

