» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)
தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது, அவா்கள் புறப்படும் இடத்திலேயே கைது செய்வது, வீட்டில் சிறையில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் இப்பிரச்னைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்படுபவா்கள் விசாரிக்கப்பட்டு எலும்பு முறிவுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கீழே விழுந்து விட்டதாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும் மனித உரிமைப் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகப் பொருளாதாரப் பின்புலத்துடன் செய்ய வேண்டும். மக்கள்தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரையறை நிா்ணயிக்க வேண்டும் என்றாா் வாசுகி. அப்போது கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யார் வெட்கித் தலைகுனிய வேண்டும்? முதல்வர் மீது இபிஎஸ் விமர்சனம்!
செவ்வாய் 13, மே 2025 4:34:17 PM (IST)

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி: பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
செவ்வாய் 13, மே 2025 4:04:08 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 13, மே 2025 3:58:04 PM (IST)

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)
