» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் உள்ள கடலில் சமீப காலமாக சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால்பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட வைகளில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது.
இந்த சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார். கடலில் கலக்கும் சாக்கடை நீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் உடனடியாக கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
புதன் 21, மே 2025 5:22:42 PM (IST)

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
புதன் 21, மே 2025 5:15:02 PM (IST)

வீடு, தொழிற்சாலைகளில் வயரிங் பணி முடிந்ததும் சோதனை அறிக்கை கட்டாயம்!
புதன் 21, மே 2025 5:02:36 PM (IST)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 21, மே 2025 3:57:21 PM (IST)

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)
