» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடு, தொழிற்சாலைகளில் வயரிங் பணி முடிந்ததும் சோதனை அறிக்கை கட்டாயம்!
புதன் 21, மே 2025 5:02:36 PM (IST)
வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் வயரிங் பணிகள் முடிவடைந்ததும் சோதனை அறிக்கை கட்டாயம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் கட்டுமானம் நடைபெறும் போது, ஒயரிங் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை விபத்து ஏற்படாமல் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒயரிங் பணிகள் முடிவடைந்ததும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சோதனை அறிக்கை கட்டாயம் வாங்குமாறு மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையை எந்த ஒரு நிலையிலும் தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளது. இதனால், மின்விபத்து ஏற்படும் போது சான்றளித்தது யார் என்பதை கண்டறிய முடியும். இதனால், சான்று வழங்குபவர் பொறுப்புடன் செயல்படுவார் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
புதன் 21, மே 2025 5:22:42 PM (IST)

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
புதன் 21, மே 2025 5:15:02 PM (IST)

குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 21, மே 2025 3:57:21 PM (IST)

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)
