» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொச்சியில் கப்பல் கவிழ்ந்த சம்பவம்: சின்னவிளை கடற்கரையில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

திங்கள் 9, ஜூன் 2025 12:02:46 PM (IST)



கொச்சி கடலில் கப்பல் கவிழ்ந்த சம்பவம் எதிரொலியாக சின்னவிளை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மீன்வளத்துறையின் சார்பில் சின்னவிளை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. 

இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக்துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள், முந்திரி பருப்பு மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுக்கியதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த வல்லுனர்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்கரை பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கண்டெய்னரில் இருந்து கைப்பற்றப்பட்ட தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதுநாள்வரை கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலில் நச்சுப்பொருட்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுனர்கள் உறுதி செய்துள்ளார்கள். தற்போது மீன்வளத்துறை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மைத்துறை ஆப்த மித்ரா தன்னார்வலர்கள், தூய்மை காவலர்கள் வாயிலாக சின்னவிளை கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருப்பதோடு, கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகள் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது. 

மேலும், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் துகள்களை சேமித்து வைப்பதற்காக முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அறையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இதுகுறித்து அனைவரும் அச்சப்பட தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் உதவி இயக்குநர் (மீன்வளம்) விர்ஜில் பிராஸ், மீன்வளத்துறை அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory