» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:28:12 AM (IST)

மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு சோதனையிட்டதில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே செட்டிச்சார்விளையை சேர்ந்த ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (27) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சுபாஷ் கிருஷ்ணன் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மாடியில் அவர் ஏராளமான செடிகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு பூந்தொட்டியில் கஞ்சா செடி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory