» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளவிளை புனித செபஸ்தியார் ஆலய சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு பள்ளவிளை புனித செபஸ்தியார் ஆலய சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு, முகாமில் மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட அரங்கம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து வாங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் நாகர்கோவில் மாநகர் நகர்நல அலுவலர் ஆல்பர் மதியரசு, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு : சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:17:21 AM (IST)

மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)

திருச்செந்தூர் கோவில் ஆவணி 5-ம் திருவிழா: சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:20:56 AM (IST)

மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த மாட்டு வண்டிகள் : விளாத்திகுளம் அருகே பரபரப்பு
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:59:48 PM (IST)
