» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதியன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டுக்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதற்கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி நேற்று தொடங்கி வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwlase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: பொதுமக்கள் அவதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)
