» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதி​முக​வுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்​டில் நிற்​பார்​கள்: இபிஎஸ் ஆவேசம்

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)

அதி​முக​வுக்கு எவர் துரோகம் செய்​தா​லும் நடுரோட்​டில் நிற்​பார்​கள், விலாசம் இல்​லாமல் போய்​விடு​வார்​கள்  என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் எடப்பாடி பழனி​சாமி பேசினார்.

சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார். | படம்:ம. பிரபு |
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா.

சிறந்த நுண்​ணறி​வு, எழுத்​து, மொழிப் புலமை, மேடைப் பேச்​சு, அரசியல் நாகரி​கம், தொண்​டர்​களை ஈர்க்​கும் அன்​பு, போராட்ட குணம், பகுத்​தறிவு சிந்​தனை, ஆளு​மைத்​திறன், தலை​மைப் பண்​பு,எளிமை​யான வாழ்வு என அனைத்​தி​லும் அன்​னாந்து பார்க்​க வைக்கக் கூடிய​வர்​தான் அண்​ணா. ஏழை​யின் சிரிப்​பில் இறைவனை காண்​போம் என்​றார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கனவு​களை நனவாக்க ஏராள​மான திட்​டங்​கள் எம்​ஜிஆர் கொண்​டு​வந்​தார்.

2011 முதல் 2021 வரையி​லான அதி​முக ஆட்​சி, பொற்​கால ஆட்​சி. இதில் 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் 1 மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட கொண்​டு​வர​வில்​லை. திமுக ஆட்​சி​யில் மக்​களுக்கும், காவலர்​களுக்​கும் பாது​காப்பு இல்​லை. இந்த ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. 6 காவலர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏழைகளின் வறுமையை பயன்​படுத்தி சிறுநீரகத்தை திருடு​கின்​றனர்.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், திருமண உதவி திட்​டம், அம்மா இரு சக்கர வாகன திட்​டம், மடிக்​கணினி திட்​டம் ஆகியவை மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். இன்​றைக்கு சிலர் அதி​முகவை அழிக்​கப் பார்க்​கிறார்​கள். அதி​முகவை எவராலும் ஒன்​றும் செய்ய முடி​யாது. எங்​களுக்கு ஆட்சி அதி​காரத்​தை​விட தன்​மானம்​தான் முக்​கி​யம். அதை இம்​மியள​வும் விட்​டுக் கொடுக்க மாட்​டேன்.

அதி​முக ஆட்​சியை கவிழ்க்க வாக்​களித்​தவர்​களை​யும் மன்​னித்து துணை முதல்​வர் பதவி கொடுத்​தோம். அவர்​கள்​தான் அதி​முக​வினரின் கோயி​லான எம்​ஜிஆர் மாளி​கையை தாக்​கினர். இவர்​களை எல்​லாம் கட்​சி​யில் சேர்க்க வேண்​டு​மா? நான் எதற்​கும் அஞ்ச மாட்​டேன். யாரும் என்னை மிரட்​டிப் பார்க்க முடி​யாது.

சிலர் அதி​முகவை கபளீகரம் செய்து ஆட்​சியை கைப்​பற்​றப் பார்த்​தார்​கள். அப்​போது ஆட்​சியை காப்​பாற்​றிக் கொடுத்​தது மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் பாஜக​தான்​. அவர்​களுக்கு நன்​றியோடு இருக்​கிறோம். கூட்​டணி சேரு​வது என்​பது, கட்சி ஆட்​சிக்கு வர வேண்​டும். எதிரி​களை வீழ்த்த வேண்​டும் என்​ற அடிப்​படை​யில் தான். அதி​முகவை காப்​பாற்ற அனை​வரும் துணிந்து நிற்க வேண்​டும். அதி​முக​வுக்கு எவர் துரோகம் செய்​தா​லும் நடுரோட்​டில் நிற்​பார்​கள், விலாசம் இல்​லாமல் போய்​விடு​வார்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory