» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

ம.தி்.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சியையும், அவர்கள் பயன்படுத்த கட்சி கொடியும் காஞ்சீபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழா, திராவிட இயக்கம் உதயமான திருநாள் விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமை தாங்கினார்.
முன்னதாக காஞ்சீபுரம் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மல்லை சத்யா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பேரணியாக நெல்லுக்கார தெரு, இரட்டை மண்டபம், காமராஜர் வீதி, தாலுகா அலுவலகம் வழியாக விழா நடைபெற்ற இடத்தை அடைந்தனர்.
முப்பெரும் விழாவில் பேராசிரியர் அப்துல் காதர், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சியாக செயல்படவும், அவர்கள் பயன்படுத்த புதிய கட்சி கொடியையும் மல்லை சத்யா அறிமுகம் செய்து வைத்தார்.
கட்சி கொடியில் நீளவாக்கில் கருப்பு நிறம் சிறிய அளவிலும், சிகப்பு நிறம் பெரிய அளவிலும், அதில் மஞ்சள் நிறத்திலான ஏழு நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ம.தி.மு.க.வில் இருந்து விலகிய செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரின் ஆலோசனைக்கு பிறகு கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார். எனினும் விழாவில் வழங்கும் நினைவு பரிசில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என பெயர் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)

ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)
