» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 9:34:16 PM (IST)

வரும் அக்.31ஆம் தேதி முதல் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (வண்டி எண். 16127 / 16128) இரு மார்க்கத்திலும் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (எண்: 16127 - 16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சியில் இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரயில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதில், தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.கடம்பூரில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரயிலவே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் : நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:59:19 AM (IST)

போக்ஸோ வழக்குகளில் .103.62 கோடி நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:55:05 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:14:14 AM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகை!
திங்கள் 27, அக்டோபர் 2025 5:48:35 PM (IST)




