» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி: தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் புகார்!

திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:38 PM (IST)



2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தினர் சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அச்சு மற்றும் காட்சி ஊடகப் பத்திரிகையாளர்களுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு நிகழ்வுகளைச் சேகரிக்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரிகள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளதாகப் பத்திரிகையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், களத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், தமிழக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-யிடம் விரிவான புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில் "அடையாள அட்டை வழங்கலில் குளறுபடி செய்த மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகப் பத்திரிகையாளர்களுக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி, சீரான முறையில் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர்கள் எம்.டி. ராமலிங்கம், பி.ஜி. பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் நா. வினோத் குமார், தென்சென்னை மாவட்ட தலைவர் அ. லட்சுமணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கழுகு வீரா மற்றும் சங்க செய்தி தொடர்பாளர் அருண் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory