» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா 7-ஆம் திருநாள் : சிவப்பு சாத்தி கோலத்தில் நடராஜர் வீதி உலா!

திங்கள் 27, ஏப்ரல் 2026 9:29:12 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஏழாம் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை அருள்மிகு நடராஜப்பெருமான் சிறப்பு 'சிவப்பு சாத்தி' அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஏழாம் திருநாளில், நடராஜப்பெருமான் சிவப்பு நிறப் பட்டு உடுத்தி, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 'சிவப்பு சாத்தி' கோலத்தில் காட்சியளித்தார். இந்தச் சிறப்பு அலங்காரத்துடன் தெப்பக்குளம் பிள்ளையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

மேள தாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் பஞ்சமூர்த்திகளுடன் நடராஜப்பெருமான் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். ரத வீதிகளில் வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாகத் தீபாராதனை காண்பித்துச் சுவாமி தரிசனம் செய்தனர். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய கோலத்தைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்யினா பத்தாம் திருநாளான ஏப்ரல் 30-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory