» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்! - காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு விஜய் கடிதம்!

புதன் 6, மே 2026 11:10:32 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் குறைவாக உள்ள நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-விடம் த.வெ.க. தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ளார். 

தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றுக்கு ஆதரவு கோரி அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

நடப்புத் தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 இடங்கள் குறைவாக உள்ளன. இந்தச் சூழலில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற விஜய் களம் இறங்கியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்குத் த.வெ.க. அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது குறித்து முடிவெடுக்க நாளை மறுநாள் அக்கட்சியின் செயற்குழு அவசரமாகக் கூட உள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 234 இடங்களைக் கொண்ட சட்டசபையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் ஆதரவு?

ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளுடன் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும், இன்று அதற்கான ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்குமா அல்லது தமிழகத்தில் அரசியல் சூழல் வேறு திசையில் மாறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கூட்டணி தர்மத்தை மீறி இடதுசாரிகளும், விசிக-வும் த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிப்பார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory