» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!

வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டப்படியான உரிமை குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

அதிமுக அலுவலகம் தங்களுக்குக் கோயில் போன்றது என்று குறிப்பிட்ட அவர் கூறியதாவது: இந்த உடலில் ஓடுவது அதிமுக-வின் ரத்தம். எங்களுக்குப் பல்வேறு பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் இது. அதிமுக அலுவலகத்தின் மீது ஒரு தூசிகூட படவோ, பாதிப்பு ஏற்படவோ எக்காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களால் அந்த அலுவலகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது, யாரும் அச்சப்பட வேண்டாம்."

மேலும், "சட்டப்படி நான் தான் உண்மையான அதிமுக தொண்டன் என்பதை நிரூபித்த பின்னரே, எனது கால் அந்த அலுவலகத்திற்குள் பதியும்," என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

கொறடா விவகாரம்:

அதிமுக தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் தங்களது தரப்பு கொறடாவை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனித்தனியாகச் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் யாருடைய உத்தரவு செல்லும் என்பதில் பெரும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இருதரப்பினரும் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், சி.வி. சண்முகத்தின் இந்த அறிக்கை தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory