» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!

திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)



குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 58 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் வேப்பமூடு மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலையில் இன்று (01.06.2026) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: ‘கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி ‘மார்ஷல்" என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக ‘பெரியவர்" என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், மார்ஷல் நேசமணி 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்கள். அன்னாரின் 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட்சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மார்ஷல் நேசமணி அவர்களின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், மார்ஷல் நேசமணி அவர்களின் கொள்ளுப்பேத்தி குடும்பத்தினர், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் நவீன், மாதவன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory